இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்துக் கொள்ளாமல் துன்ப காலத்திலிருந்து எவ்வாறு வெளி வருவது? துன்பங்களுக்கு இடை இடையே நடக்கும் இன்பங்கள் தான் வாழ்க்கை. வெறும் இனிப்புகளையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சலித்து விடும் அல்லவா? துன்பம் வரும் வேளையில் அனைத்து மனித மனமும் இயல்பாய் நினைப்பது இதுவே,"எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?". ஏன்னா உங்க வாழ்க்கை மட்டுமே நீங்கள் அறிந்தது. அடுத்தவர்களின் வாழ்க்கையாய் நாம் காண்பது ஒரு மேலோட்டம்,நம்முடைய பார்வை மட்டுமே. பார்வையாளன் அறிந்ததெல்லாம், நடிகனின் நடிப்பு மட்டுமே. அதன் பின்னான வலி,உழைப்பு , ஏமாற்றம் இவையெல்லாம் நடிகனை சார்ந்தது,அவன் மட்டுமே அறிந்தது.. இங்கு அனைவருமே அப்படிதான் அவர் அவர் வாழ்க்கையின் நடிகன், அடுத்தவர்கள் வாழ்க்கையின் பார்வையாளன். இதை உணர்ந்தோமானால் நாம் மட்டும் துன்பத்தில் உழல்வது போல தோன்றுவது ஒரு பிம்பமே என்று அறிவீர்கள். இங்கே ஒருவரும் வலிகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படி அதை தமக்கு சாதகமாக்கி வாழ்க்கையை சுவாரஸ்யமாய் கடத்துக்கிறார்கள் என்பது தான் சமார்த்தியம். என் நண்பர்கள் என்...

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அமல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

படம்
கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் எப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை பிறப்பித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரளர் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.   மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, *வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் க...

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? - அமைச்சர் திடீர் விளக்கம்!

படம்
  தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் தினசரி நேரடி வகுப்புகள் நடைபெறும் என...

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை

படம்
  சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5பேர் கொண்ட மர்ம நபர்கள் சீனிவாசனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவில் ஓட ஓட விரட்டி கத்தியால் தலையில் வெட்டி விட்டு ஐந்து பேர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

850 பவுன் நகையை நோட்டமிட்டு தூக்கிய கொள்ளையர்கள்

 புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ளது கோபாலபட்டினம். இங்கு வசிக்கும் ஜாபர் சாதிக் என்பவர் குடும்பத்துடன் புருனே நாட்டில் செட்டிலாகிவிட்டார். இதனால், கோபாலபட்டணத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இதனை வெகுநாளாக நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். இன்று வழக்கம்போல் ஜாபரின் வீட்டை பார்த்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து அறைக் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்ததுள்ளது. மேலும், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. விசாரணையில், பீரோவில் இருந்த 850 பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது.  இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்த முயற்சி கைக்கொடுக்காத நிலையில், க...

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி - வாலிபர்கள் கைது

படம்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பொன்மனை பகுதியை சேர்ந்த 17 -வயது சிறுமி ஒருவர் குலசேகரம் பகுதியில் ஃபேன்சி ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாயார் இல்லை தந்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். குலசேகரம் ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த சுஜின் (27) மற்றும் பெனட்ராஜ் (30) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியிடம் மொபைல் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.  இவர் பணிக்கு செல்லும் போதும் வரும் போதும் மோட்டார் சைக்கிளில் சென்று டார்ச்சர் கொடுத்துள்ளனர். மேலும் அவர் வீட்டிற்கு செல்லும் பாதையில் நின்றுகொண்டு, அவரது கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிட்டு உள்ளார்.  இதனை அடுத்து சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமி மீட்டுள்ளனர். இந்நிலையில் வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  சுஜின், பெனட்ராஜ் மீது போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டது. போலீசார் இர...

அகவிலைப்படியை அதிகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

படம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்தார்.  அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல்  17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.   ...

திருவள்ளூர்: விவாகரத்து கேட்டதில் தகராறு..மனைவி குத்திக்கொலை

படம்
 திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அய்யநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்களா. வயது 40. இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தமிழ்மணி என்பவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அய்யநேரி கிராமத்திற்கு சென்ற கணவன் தமிழ்மணி, வீட்டில் இருந்த மனைவி மங்களாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துபோடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மனைவி மங்களா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கணவன் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கு சென்ற கணவன் தமிழ்மணி அருகில் இருந்த கத்தியால் மங்களாவை சரமாரியாக குத்தியுள்ளார்.  இதில் படுகாயமடைந்த மங்களாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான கட்டத்தை அவர் எட்டயிருந்ததால் அங்கிருந்து வாலாஜா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும், மருத்துவமனைக்கு ச...

வீட்டு மனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த அ.தி.மு.க., பிரமுகர்கள்

 ஈரோடு நேதாஜி தினசாரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த அ.தி.மு.க., பிரமுகர்கள் உட்பட 11போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த அய்யந்துரை(62). இவர் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி. இவர், ஈரோடு எஸ்பி சசி மோகனிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இதில், வியாபாரிகளின் நலனுக்காக நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் கடநத் 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட்டது. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக 800பேர் உள்ளனர். மார்க்கெட் சங்கத்தின் தலைவராகவும், அதிமுக.,வின் மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல் மேட்டினை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும், அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த முருகசேகர் என்ற முருகநாதன், பொருளாளரும், அ.தி.மு.க.,வார்டு செயலாளரான ...

மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை

  மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய் அனுப்பியதில் முறைகேடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெறதாக பரவலாக புகார் எழுந்ததது.  இதையடுத்து மதுரை ஆவின்  நிறுவனத்தில் 2019 முதல் நடைபெற்ற பணி நியமனங்கள் , பொருள்கள் கொள்முதல் , தற்காலிகப் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் , ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  ஆவின் மேலாளர் , அதிகாரிகள் மற்றும் கணக்கர்கள் , பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது .

தீரன் பட பாணியில் கொள்ளை: 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட இருவர் கைது..

  அரக்கோணத்தை அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவருக்கு வயது 25. இவர் கிராமத்திற்கு வெளியில் தனக்கு சொந்தமான வயலின் நடுவில் தனியாக வீடு கட்டி தனது தாய் சுதா(52) பெரியம்மா லதா(57) பாட்டி ரஞ்சிதம்மாள்(76) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு, பயமுறுத்தி, வீட்டின் உள்ளே நுழைந்து, பெண்கள் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ. 60,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றனர்.  நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் குண்டு ரவை சிதறி  படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட நால்வரும் உடனடியாக சிகிச்சைக்கு அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  தீரன் திரைப்பட பாணியில் நடந்த...

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள காவல்துறை

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் வருகிற 31.12.2021ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி, 31.12.2021 அன்று இரவு ன்னை பெருநகரில், பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும், சென்னை பெருநகரில் அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடும் பட்சத்தில், தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நில...

2022 -ல் ஜனவரி 1 முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் - RBI அறிவிப்பு

நிதி சார்ந்த விஷயங்களில் என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வரப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம். பாதுகாப்பானதாக மாறும் டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகள்: பாதுகாப்பான கார்டு பேமெண்ட்டுகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற,  வணிகர்கள் தங்கள் தளங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் கார்டு தொடர்பான எல்லா தரவையும் அகற்றுமாறு ஆர்பிஐ கோரியுள்ளது. அதன்படி இனி, ​​ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் கார்டு பேமெண்ட்டில் ஈடுபடும் போது, ​​தங்களது முழு அட்டை விவரங்களை கொடுக்க வேண்டும் அல்லது டோக்கனைசேஷன் செய்ய வேண்டும். இது மறைமுகமாக செயல்படும் ஆதாரைப் போலவே இருக்கும். அதாவது சரியான அட்டை விவரங்கள் யாருக்கும் புரியாது. 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட மறைமுக வரி விதிகள் மேலும் கடுமையாக்கப்படும். வெளியான தகவலின்படி, புத்தாண்டு தொடக்கத்தில் CGSTயில் பல மாற்றங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். சில மாற்றங்களில் வரிக்கு உட்பட்ட விநியோகம், வரிக் கடன்களுக்கான தகுதி மற்றும் சில வழக்குகள் தொடர்பாக மேல்முறையீடுகளை தாக்கல் செய்வது தொடர்பான விதிமுறைகள் ஆகியவையு...

15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட ஜனவரி 1 முதல் முன்பதிவு

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 15 முதல் 18 வயதுடையோருக்கு போடுவதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பரவலின் உலகளாவிய தாக்கத்தை கவனத்தில் கொண்டு இந்தியாவில் 15 முதல் 18 வயதுடையடையோருக்கு கொரோனா தடுப்பூசி போட சில வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். 1. கொரோனா தடுப்பூசி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் போடப்படும். அத்தகைய பயனாளிகளுக்கு இந்திய தயாரிப்பான "கோவாக்சின்" மட்டுமே செலுத்தப்படும்.2. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு டோஸ்களைப் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் (HCWs) மற்றும் முன்கள பணியாளர்களுக்கு (FLWs) சிறப்பு டோஸ் தடுப்பூசி 2022ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் வழங்கப்படும். இரண்டு டோஸ் போட்டுக் கொண்ட நாளில் இருந்து ஒன்பது மாதங்களை கடந்திருந்தால் இந்த சிறப்பு டோஸ் போட முன்னுரிமை மற்றும் வரிசைப்படுத்துதல் கண...