எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்துக் கொள்ளாமல் துன்ப காலத்திலிருந்து எவ்வாறு வெளி வருவது?
துன்பங்களுக்கு இடை இடையே நடக்கும் இன்பங்கள் தான் வாழ்க்கை. வெறும் இனிப்புகளையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சலித்து விடும் அல்லவா?
துன்பம் வரும் வேளையில் அனைத்து மனித மனமும் இயல்பாய் நினைப்பது இதுவே,"எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?". ஏன்னா உங்க வாழ்க்கை மட்டுமே நீங்கள் அறிந்தது. அடுத்தவர்களின் வாழ்க்கையாய் நாம் காண்பது ஒரு மேலோட்டம்,நம்முடைய பார்வை மட்டுமே. பார்வையாளன் அறிந்ததெல்லாம், நடிகனின் நடிப்பு மட்டுமே. அதன் பின்னான வலி,உழைப்பு , ஏமாற்றம் இவையெல்லாம் நடிகனை சார்ந்தது,அவன் மட்டுமே அறிந்தது.. இங்கு அனைவருமே அப்படிதான் அவர் அவர் வாழ்க்கையின் நடிகன், அடுத்தவர்கள் வாழ்க்கையின் பார்வையாளன். இதை உணர்ந்தோமானால் நாம் மட்டும் துன்பத்தில் உழல்வது போல தோன்றுவது ஒரு பிம்பமே என்று அறிவீர்கள். இங்கே ஒருவரும் வலிகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படி அதை தமக்கு சாதகமாக்கி வாழ்க்கையை சுவாரஸ்யமாய் கடத்துக்கிறார்கள் என்பது தான் சமார்த்தியம்.
என் நண்பர்கள் என்னிடம் அதிகமாய் கேட்கும் கேள்வி. "எப்படி நீ மட்டும் எப்பவுமே சந்தோஷமா இருக்க?". இதற்கான பதில் உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். எந்த துன்பமோ வலியோ வருகையில் அதற்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தாலே அதற்கான தீர்வு கிடைக்கும். அந்த உண்மையான காரணம் என்னவென்று அறிவதற்கு நீங்கள் அந்த துன்பத்தினுள் பயணிக்க வேண்டும். அதன் ஆரம்பபுள்ளியை நீங்கள் அடையும் நேரம் உங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். சரி செய்ய முடியாத பிரச்சனை இங்கு எதுவுமே இல்லை. சிலவற்றை ஏற்றுக்கொள்வதாலும்,சிலவற்றை மாற்றிக்கொள்வதாலும்,சிலவற்றிற்கு சரியான உழைப்பையும் கவனத்தையும் செலுத்துவதாலும் நிச்சயமாய் அவை சரி செய்யப்படும். இவை எவையுமே இல்லை எனில் சரணடைந்துவிடுங்கள் அந்த வலியிடமே. சகலமும் முடிவுக்கு வரும் ஒருப் புள்ளியில். இதற்கிடையே உங்களுக்கு பிடித்த விடயங்களை செய்வது, நம்மை சுற்றி நல்ல நண்பர்களையும் சூழலையும் வைத்திருத்தல் புத்துணர்ச்சியையும் தெம்பையும் கொடுக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக