இடுகைகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நொந்துக் கொள்ளாமல் துன்ப காலத்திலிருந்து எவ்வாறு வெளி வருவது? துன்பங்களுக்கு இடை இடையே நடக்கும் இன்பங்கள் தான் வாழ்க்கை. வெறும் இனிப்புகளையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சலித்து விடும் அல்லவா? துன்பம் வரும் வேளையில் அனைத்து மனித மனமும் இயல்பாய் நினைப்பது இதுவே,"எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?". ஏன்னா உங்க வாழ்க்கை மட்டுமே நீங்கள் அறிந்தது. அடுத்தவர்களின் வாழ்க்கையாய் நாம் காண்பது ஒரு மேலோட்டம்,நம்முடைய பார்வை மட்டுமே. பார்வையாளன் அறிந்ததெல்லாம், நடிகனின் நடிப்பு மட்டுமே. அதன் பின்னான வலி,உழைப்பு , ஏமாற்றம் இவையெல்லாம் நடிகனை சார்ந்தது,அவன் மட்டுமே அறிந்தது.. இங்கு அனைவருமே அப்படிதான் அவர் அவர் வாழ்க்கையின் நடிகன், அடுத்தவர்கள் வாழ்க்கையின் பார்வையாளன். இதை உணர்ந்தோமானால் நாம் மட்டும் துன்பத்தில் உழல்வது போல தோன்றுவது ஒரு பிம்பமே என்று அறிவீர்கள். இங்கே ஒருவரும் வலிகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படி அதை தமக்கு சாதகமாக்கி வாழ்க்கையை சுவாரஸ்யமாய் கடத்துக்கிறார்கள் என்பது தான் சமார்த்தியம். என் நண்பர்கள் என்...

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அமல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

படம்
கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் எப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக காவல் துறை பிறப்பித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரளர் பரவலை தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.   மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, *வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் க...

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? - அமைச்சர் திடீர் விளக்கம்!

படம்
  தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் தினசரி நேரடி வகுப்புகள் நடைபெறும் என...

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் 17வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை

படம்
  சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டு இருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5பேர் கொண்ட மர்ம நபர்கள் சீனிவாசனை இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து, புதுவண்ணாரப்பேட்டை மாதா கோவில் தெருவில் ஓட ஓட விரட்டி கத்தியால் தலையில் வெட்டி விட்டு ஐந்து பேர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

850 பவுன் நகையை நோட்டமிட்டு தூக்கிய கொள்ளையர்கள்

 புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ளது கோபாலபட்டினம். இங்கு வசிக்கும் ஜாபர் சாதிக் என்பவர் குடும்பத்துடன் புருனே நாட்டில் செட்டிலாகிவிட்டார். இதனால், கோபாலபட்டணத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இதனை வெகுநாளாக நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். இன்று வழக்கம்போல் ஜாபரின் வீட்டை பார்த்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து அறைக் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்ததுள்ளது. மேலும், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. விசாரணையில், பீரோவில் இருந்த 850 பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றது தெரியவந்தது.  இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்த முயற்சி கைக்கொடுக்காத நிலையில், க...

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி - வாலிபர்கள் கைது

படம்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பொன்மனை பகுதியை சேர்ந்த 17 -வயது சிறுமி ஒருவர் குலசேகரம் பகுதியில் ஃபேன்சி ஸ்டோரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாயார் இல்லை தந்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். குலசேகரம் ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த சுஜின் (27) மற்றும் பெனட்ராஜ் (30) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியிடம் மொபைல் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.  இவர் பணிக்கு செல்லும் போதும் வரும் போதும் மோட்டார் சைக்கிளில் சென்று டார்ச்சர் கொடுத்துள்ளனர். மேலும் அவர் வீட்டிற்கு செல்லும் பாதையில் நின்றுகொண்டு, அவரது கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிட்டு உள்ளார்.  இதனை அடுத்து சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமி மீட்டுள்ளனர். இந்நிலையில் வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  சுஜின், பெனட்ராஜ் மீது போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டது. போலீசார் இர...

அகவிலைப்படியை அதிகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

படம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்தார்.  அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல்  17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.   ...